கோகூர் புனித
அந்தோனியார் திருத்தலம்
வேளாங்கண்ணி மாதா வின் திரு பீடத்தில் திருப்பலி நிறைவேற்றும் பங்கு தந்தை அவர்கள்
முன்னுரை
நாகப்பட்டினம் அருகே கீழ்வேளூர் புனித
வளனார் ஆலய பங்கில் உள்ள
கோகூர் புனித அந்தோனியார் தினமும்
தன்னை நாடி வரும் எல்லா
மத மக்களுக்கும் புதுமைகளை அள்ளி அள்ளி தருகிறார்.கோகூர் புனித அந்தோனியார்
தமக்கு செய்த புதுமைக்கு நன்றியாக
மக்கள் செய்யும்,நேர்த்திகடன் என்னவென்றால்,ஒவ்வொரு ஆண்டும் ஜூன்
மாதத்தில் நடைபெறும் திருவிழாவில்
கையில் தீச்சட்டி எடுத்து கருப்பு நிற
ஆடை அணிந்து அந்தோனியாரை வேண்டிகொள்கிறார்கள்,அந்த ஒரு நாளில்
மட்டும் ஆயிரகணக்கான மக்கள் வந்து கோகூர்
புனித அந்தோனியாரை மகிமை படுத்தி செல்கிறார்கள்,நீங்களும் ஒருநாள் கோகூர் புனித
அந்தோனியார் ஆலயம் வந்துதான் பாருங்களேன்
,நிச்சயம் உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி
தருவார் கோகூர் புனித அந்தோனியார்.
இடம்- தஞ்சாவூர் லிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் (திருவாரூர்
வழி )கீழ்வேளூர் பங்கில் நிற்கும் ,அங்கிருந்து
ஆ ட்டோ மூலம்
செல்லலாம்.(மினி பஸ் வசதியும் உண்டு
).
மினி பஸ் (கீழ்வேளூர்-வடகரை)
நேரம் :காலை 9.00.11.00 மணி,மதியம் 1.00 மணி,மாலை 3.00,5.00,7.00 மணி
கோகூர் புனித அந்தோனியார்
நாகப்பட்டினம் அருகே கீழ்வேளூர் புனித
வளனார் ஆலய பங்கில் உள்ள
கோகூர் புனித அந்தோனியார் தினமும்
தன்னை நாடி வரும் எல்லா
மத மக்களுக்கும் புதுமைகளை அள்ளி அள்ளி தருகிறார்.கோகூர் புனித அந்தோனியார்
தமக்கு செய்த புதுமைக்கு நன்றியாக
மக்கள் செய்யும்,நேர்த்திகடன் என்னவென்றால்,ஒவ்வொரு ஆண்டும் ஜூன்
மாதத்தில் நடைபெறும் திருவிழாவில்
கையில் தீச்சட்டி எடுத்து கருப்பு நிற
ஆடை அணிந்து அந்தோனியாரை வேண்டிகொள்கிறார்கள்,அந்த ஒரு நாளில்
மட்டும் ஆயிரகணக்கான மக்கள் வந்து கோகூர்
புனித அந்தோனியாரை மகிமை படுத்தி செல்கிறார்கள்,நீங்களும் ஒருநாள் கோகூர் புனித
அந்தோனியார் ஆலயம் வந்துதான் பாருங்களேன்
,நிச்சயம் உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி
தருவார் கோகூர் புனித அந்தோனியார்.
இடம்- தஞ்சாவூர் லிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் (திருவாரூர்
வழி )கீழ்வேளூர் பங்கில் நிற்கும் ,அங்கிருந்து
ஆ ட்டோ மூலம்
செல்லலாம்.(மினி பஸ் வசதியும் உண்டு
).
மினி பஸ் (கீழ்வேளூர்-வடகரை)
நேரம் :காலை 9.00.11.00 மணி,மதியம் 1.00 மணி,மாலை 3.00,5.00,7.00 மணி
மினி பஸ் (கீழ்வேளூர்-வடகரை)
நேரம் :காலை 9.00.11.00 மணி,மதியம் 1.00 மணி,மாலை 3.00,5.00,7.00 மணி
கோகூர் புனித அந்தோனியார்
கோகூரில் கோயில் கொண்டுள்ள கோடி அற்புதர் புனித அந்தோனியாரின் வரலாறு
நாகப்பட்டினம் மறை வட்டத்திற்கு இரண்டு பெருமைகள் உண்டு ,ஒன்று வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலம் ,மற்றொன்று கோகூர் புனித அந்தோனியார் திருத்தலம்.ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும் ,ஜூன் மாதம் நடைபெறும் கோகூரில் கோயில் கொண்டுள்ள கோடி அற்புதர் புனித அந்தோனியாரின் பெருவிழாவிலும் ஆயிரகணக்கான மக்கள் கூடுவதையும் ,ஜெபிப்பதையும் பார்ப்போர் பரவசம் அடைகின்றனர் .கண்டோர் சாட்சி கூறுகின்றனர் ,நாகையிலிருந்து மேற்க்கே திருவாரூர் நெடுஞ்சாலையில் கீழ்வேளூர் லிருந்து வடக்கே சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் கோகூர் புனித அந்தோனியார் திருத்தலம் உள்ளது .இந்த கிராமத்தில் தான் புனித அந்தோனியார் குடிகொண்டு அற்புதங்கள் ,அதிசயங்கள் செய்து வருகிறார்.
நாகப்பட்டினம் மறை வட்டத்திற்கு இரண்டு பெருமைகள் உண்டு ,ஒன்று வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலம் ,மற்றொன்று கோகூர் புனித அந்தோனியார் திருத்தலம்.ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும் ,ஜூன் மாதம் நடைபெறும் கோகூரில் கோயில் கொண்டுள்ள கோடி அற்புதர் புனித அந்தோனியாரின் பெருவிழாவிலும் ஆயிரகணக்கான மக்கள் கூடுவதையும் ,ஜெபிப்பதையும் பார்ப்போர் பரவசம் அடைகின்றனர் .கண்டோர் சாட்சி கூறுகின்றனர் ,நாகையிலிருந்து மேற்க்கே திருவாரூர் நெடுஞ்சாலையில் கீழ்வேளூர் லிருந்து வடக்கே சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் கோகூர் புனித அந்தோனியார் திருத்தலம் உள்ளது .இந்த கிராமத்தில் தான் புனித அந்தோனியார் குடிகொண்டு அற்புதங்கள் ,அதிசயங்கள் செய்து வருகிறார்.
கோகூர் பெயர்காரணம் :
கோகூரின் பழைய பெயர் "பனந்தோப்பு ".கோவூர் கிழார் என்னும் பெரியவர் இங்கு தங்கி இருந்ததால் காலப்போக்கில் அது மருவி அவர் பெயரிலே கோகூர் என பெயர்பெற்றது .இவருக்கு பிறகு "வெள்ளை புடவை கார அம்மா " என்னும் ஒருவர் இங்கு தங்கி அறப்பணிகள் செய்து வந்தார்,ஆனால் காலப்போக்கில் இங்கிருந்து மறைந்துவிட்டார் என்பது செவிவழி செய்தி.
கோகூரின் பழைய பெயர் "பனந்தோப்பு ".கோவூர் கிழார் என்னும் பெரியவர் இங்கு தங்கி இருந்ததால் காலப்போக்கில் அது மருவி அவர் பெயரிலே கோகூர் என பெயர்பெற்றது .இவருக்கு பிறகு "வெள்ளை புடவை கார அம்மா " என்னும் ஒருவர் இங்கு தங்கி அறப்பணிகள் செய்து வந்தார்,ஆனால் காலப்போக்கில் இங்கிருந்து மறைந்துவிட்டார் என்பது செவிவழி செய்தி.
கோகூரில் கோயில் வந்தது எப்படி:
கி.பி 1837 ஆண்டு வளம் கொழிக்கும் வற்றா நதியான வெட்டாற்றில் முதியவர் ஒருவர் தூண்டில் போட்டுகொண்டு இருந்தார்,அவ்வேளையில் புனித அந்தோனியார் சொருபம் ஒன்று நீரில் மிதந்து துண்டிலை சுற்றி சுற்றி வந்தது ,அந்த முதியவர் அதை ஒதுக்கிவிட்டு தூண்டில் போட்டார்,ஆனால் மீண்டும் மீண்டும் அந்த அந்தோனியார் சொருபம் தூண்டிலை சுற்றி வர வியப்படைந்த அவர் சொருபத்தை தன் வீட்டுக்கு கொண்டுவந்தார் ,அன்று இரவு அவர் தூங்கும் போது ,கனவில் அவர் பெயரை சொல்லி கோகூரில் தனக்கு ஒரு கோவில் கட்டவும் ,நான் அந்தோனியார் என்றும் கூறியது .கண் விழித்த அவர் காலையில் ஊர் மக்களிடம் நடந்ததை சொல்லி ,எல்லோரின் உதவியுடன் முதன்முதலில் கீற்று கோவில் கட்டி புனித அந்தோனியார் சொருபத்தை அதில் வைத்து வழிபட்டு வந்தனர் ,அந்த புதுமை வழங்கும் புனித அந்தோனியார் சொருபம் இன்று ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது
கி.பி 1837 ஆண்டு வளம் கொழிக்கும் வற்றா நதியான வெட்டாற்றில் முதியவர் ஒருவர் தூண்டில் போட்டுகொண்டு இருந்தார்,அவ்வேளையில் புனித அந்தோனியார் சொருபம் ஒன்று நீரில் மிதந்து துண்டிலை சுற்றி சுற்றி வந்தது ,அந்த முதியவர் அதை ஒதுக்கிவிட்டு தூண்டில் போட்டார்,ஆனால் மீண்டும் மீண்டும் அந்த அந்தோனியார் சொருபம் தூண்டிலை சுற்றி வர வியப்படைந்த அவர் சொருபத்தை தன் வீட்டுக்கு கொண்டுவந்தார் ,அன்று இரவு அவர் தூங்கும் போது ,கனவில் அவர் பெயரை சொல்லி கோகூரில் தனக்கு ஒரு கோவில் கட்டவும் ,நான் அந்தோனியார் என்றும் கூறியது .கண் விழித்த அவர் காலையில் ஊர் மக்களிடம் நடந்ததை சொல்லி ,எல்லோரின் உதவியுடன் முதன்முதலில் கீற்று கோவில் கட்டி புனித அந்தோனியார் சொருபத்தை அதில் வைத்து வழிபட்டு வந்தனர் ,அந்த புதுமை வழங்கும் புனித அந்தோனியார் சொருபம் இன்று ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது
கோகூர் புனித அந்தோனியார் செய்த புதுமைகள்
சலவை தொழிலாளி:
சலவை தொழிலாளி ஒருவர் கோகூர் புனித அந்தோனியாருக்கு நேர்த்தி கடன் வேண்டி,நிறைவேறியதால், கோகூர் புனித அந்தோனியாருக்கு சமையல் செய்து அனைவருக்கும்
பரிமாறணும் என்ற எண்ணத்தில் ,சமைத்துவிட்டு எல்லா மக்களையும் சாப்பிட வருமாறு அழைத்தார் ,ஆனால் மக்கள் அவரை தாழ்ந்தவர் என்று சொல்லி சாப்பிட வர முடியாது என்று அவமானபடுத்திவிட்டனர்,சலவை தொழிலாளி மனம் நொந்தவாறு சமையல் செய்த சாப்பாடு அனைத்தையும் ஒரு குழி தோண்டி புதைத்து விட்டு சென்று விட்டார்.அடுத்த ஆண்டு அதே இடத்தில் சமைக்க அடுப்பு தோண்டிய போது சூடான ஆவி வெளிவர ,மக்கள் பயந்து போய் குழி தோண்டி பார்த்தபோது சென்ற ஆண்டு சமைத்த சாதமும் குழம்பும் அன்று சமைத்தது போலவே இருந்தது கண்டு அனைவரும் வெட்கத்தால் வியந்தார்கள் .தங்கள் தவறை உணர்ந்தார்கள் ,கோகூர் புனித அந்தோனியாரின் புதுமையை எண்ணி எல்லோரும் அந்த உணவை உண்டார்கள். அனைவரும் கடவுளின் மக்கள் என்று கோகூர் புனித அந்தோனியார் புரிய வைத்தார்.இந்த புதுமைக்கு கோகூர் மக்களே சாட்சி .
சலவை தொழிலாளி ஒருவர் கோகூர் புனித அந்தோனியாருக்கு நேர்த்தி கடன் வேண்டி,நிறைவேறியதால், கோகூர் புனித அந்தோனியாருக்கு சமையல் செய்து அனைவருக்கும்
பரிமாறணும் என்ற எண்ணத்தில் ,சமைத்துவிட்டு எல்லா மக்களையும் சாப்பிட வருமாறு அழைத்தார் ,ஆனால் மக்கள் அவரை தாழ்ந்தவர் என்று சொல்லி சாப்பிட வர முடியாது என்று அவமானபடுத்திவிட்டனர்,சலவை தொழிலாளி மனம் நொந்தவாறு சமையல் செய்த சாப்பாடு அனைத்தையும் ஒரு குழி தோண்டி புதைத்து விட்டு சென்று விட்டார்.அடுத்த ஆண்டு அதே இடத்தில் சமைக்க அடுப்பு தோண்டிய போது சூடான ஆவி வெளிவர ,மக்கள் பயந்து போய் குழி தோண்டி பார்த்தபோது சென்ற ஆண்டு சமைத்த சாதமும் குழம்பும் அன்று சமைத்தது போலவே இருந்தது கண்டு அனைவரும் வெட்கத்தால் வியந்தார்கள் .தங்கள் தவறை உணர்ந்தார்கள் ,கோகூர் புனித அந்தோனியாரின் புதுமையை எண்ணி எல்லோரும் அந்த உணவை உண்டார்கள். அனைவரும் கடவுளின் மக்கள் என்று கோகூர் புனித அந்தோனியார் புரிய வைத்தார்.இந்த புதுமைக்கு கோகூர் மக்களே சாட்சி .
தவிடுபொடியாகும் செய்வினை,ஏவல்,பில்லி,சூனியம்:
தவிடுபொடியாகும் செய்வினை,ஏவல்,பில்லி,சூனியம் எல்லாம் கோகூர் புனித அந்தோனியார் ஆலயத்திற்க்கு வந்தவுடன்
கோகூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தீய ஆவியின் பிடியில் சிக்கி நோயுற்று ஒரு பெண் இருந்தாள்.அவள் செவ்வாய் தோறும் கோகூர் புனித அந்தோனியார் ஆலயத்திற்க்கு வந்து ஜெபித்து உறங்குவார்,அப்போது கோகூர் புனித அந்தோனியார் கனவில் தோன்றி பின்வருமாறு சொன்னார் :மகளே நீ நாளை வந்து கோயில் பிள்ளையை பார் ",இதை கோயில் பிள்ளையும் கேட்டு அந்த பெண்ணுக்காக ஜெபித்து ,நாளை வாம்மா என்று கூறி சென்று விட்டார்,அடுத்த நாள் அந்த பெண் வந்தவுடன் கோகூர் புனித அந்தோனியார் சொருபத்தின் பாதத்தில் இருந்து செய்வினை செய்த சீட்டை எடுத்து கொடுத்தார்,உடனே அந்த பெண்ணின் உடம்பில் இருந்து அசுத்த ஆவி வெளியேறியது ,இப்போது நலமுடன் வாழ்கிறாள் அந்த பெண் பூலங்குடி என்ற கிராமத்தில் -அந்த பெண்ணே சாட்சி கூறி இருக்கிறாள்.
தவிடுபொடியாகும் செய்வினை,ஏவல்,பில்லி,சூனியம் எல்லாம் கோகூர் புனித அந்தோனியார் ஆலயத்திற்க்கு வந்தவுடன்
கோகூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தீய ஆவியின் பிடியில் சிக்கி நோயுற்று ஒரு பெண் இருந்தாள்.அவள் செவ்வாய் தோறும் கோகூர் புனித அந்தோனியார் ஆலயத்திற்க்கு வந்து ஜெபித்து உறங்குவார்,அப்போது கோகூர் புனித அந்தோனியார் கனவில் தோன்றி பின்வருமாறு சொன்னார் :மகளே நீ நாளை வந்து கோயில் பிள்ளையை பார் ",இதை கோயில் பிள்ளையும் கேட்டு அந்த பெண்ணுக்காக ஜெபித்து ,நாளை வாம்மா என்று கூறி சென்று விட்டார்,அடுத்த நாள் அந்த பெண் வந்தவுடன் கோகூர் புனித அந்தோனியார் சொருபத்தின் பாதத்தில் இருந்து செய்வினை செய்த சீட்டை எடுத்து கொடுத்தார்,உடனே அந்த பெண்ணின் உடம்பில் இருந்து அசுத்த ஆவி வெளியேறியது ,இப்போது நலமுடன் வாழ்கிறாள் அந்த பெண் பூலங்குடி என்ற கிராமத்தில் -அந்த பெண்ணே சாட்சி கூறி இருக்கிறாள்.
குழந்தை வரம் தருகிறார் -கோகூர் புனித அந்தோனியார்
தீர்த்தம்பேட்டை என்ற ஊரை சேர்ந்த பெண்ணிற்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தைபேறு இல்லை,கோகூர் புனித அந்தோனியாரை நம்பி வந்து செபித்து ஆலயத்தில் உறங்கினார்,கோகூர் புனித அந்தோனியாரின் புதுமையால் குழந்தை பாக்கியம் பெற்றாள் . குழந்தை வரம் தருகிறார் -கோகூர் புனித அந்தோனியார்.
தீர்த்தம்பேட்டை என்ற ஊரை சேர்ந்த பெண்ணிற்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தைபேறு இல்லை,கோகூர் புனித அந்தோனியாரை நம்பி வந்து செபித்து ஆலயத்தில் உறங்கினார்,கோகூர் புனித அந்தோனியாரின் புதுமையால் குழந்தை பாக்கியம் பெற்றாள் . குழந்தை வரம் தருகிறார் -கோகூர் புனித அந்தோனியார்.
காணாமல் போகும் எல்லாவற்றையும் கண்டு பிடித்து தருபவர் கோகூர் புனித அந்தோனியார்
ஒரு குடும்பத்தார் கோகூர் புனித அந்தோனியாருக்கு வேண்டிக்கொண்டு ஆடு ஒன்று வளர்த்தார்கள்,வேண்டுதல் நிறைவேறும் நாள் வந்தபோது அந்த ஆடு காணாமல் பொய் விட்டது,அந்த குடும்பம் எங்க தேடியும் ஆட்டை காணவில்லை,பிறகு வருத்ததுடன் வேறொரு அட்டை வாங்கி வேண்டுதலை நிறைவேற்றபோகும்போது ,காணமல் போன அதே ஆடு அந்த இடத்தில் வந்து நின்றது ,அந்த குடும்பம் கோகூர் புனித அந்தோனியாருக்கு நன்றி சொல்லி வேண்டுதலை நிறைவேற்றினார்கள்,காணாமல் போகும் எல்லாவற்றையும் கண்டு பிடித்து தருபவர் கோகூர் புனித அந்தோனியார்
புயல்வெள்ளத்திலிருந்து
காப்பாற்றிய கோகூர் புனித அந்தோனியார்
1952 ஆண்டு கோகூரில் பெரும் புயல்,வெள்ளம்,வந்து மக்கள் தங்க இடமில்லாமல் மிகவும் துன்ப பட்டார்கள் ,மக்கள் எல்லாரும் கோகூர் புனித அந்தோனியாரை நம்பி ஆலயத்திற்குள் வந்து தங்கினார்கள்,வெள்ளம் அதிகரித்தாலும் ஆலய படிக்கட்டை தாண்டி உள்ளே ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை,இது ஒரு பெரும் புதுமை என கோகூர் மக்கள் இன்றும் கூறுகின்றனர்.
கோகூர் புனித அந்தோனியாரின் புதுமையை சொல்லிக்கொண்டே போகலாம் நீங்களும் ஒருநாள் கோகூர் புனித அந்தோனியார் ஆலயம் வந்துதான் பாருங்களேன்,பிறகு நீங்களும் கோகூர் புனித அந்தோனியாரின் சாட்சியாய் வாழ்வீர்கள்.
ஒரு குடும்பத்தார் கோகூர் புனித அந்தோனியாருக்கு வேண்டிக்கொண்டு ஆடு ஒன்று வளர்த்தார்கள்,வேண்டுதல் நிறைவேறும் நாள் வந்தபோது அந்த ஆடு காணாமல் பொய் விட்டது,அந்த குடும்பம் எங்க தேடியும் ஆட்டை காணவில்லை,பிறகு வருத்ததுடன் வேறொரு அட்டை வாங்கி வேண்டுதலை நிறைவேற்றபோகும்போது ,காணமல் போன அதே ஆடு அந்த இடத்தில் வந்து நின்றது ,அந்த குடும்பம் கோகூர் புனித அந்தோனியாருக்கு நன்றி சொல்லி வேண்டுதலை நிறைவேற்றினார்கள்,காணாமல் போகும் எல்லாவற்றையும் கண்டு பிடித்து தருபவர் கோகூர் புனித அந்தோனியார்
புயல்வெள்ளத்திலிருந்து
காப்பாற்றிய கோகூர் புனித அந்தோனியார்
1952 ஆண்டு கோகூரில் பெரும் புயல்,வெள்ளம்,வந்து மக்கள் தங்க இடமில்லாமல் மிகவும் துன்ப பட்டார்கள் ,மக்கள் எல்லாரும் கோகூர் புனித அந்தோனியாரை நம்பி ஆலயத்திற்குள் வந்து தங்கினார்கள்,வெள்ளம் அதிகரித்தாலும் ஆலய படிக்கட்டை தாண்டி உள்ளே ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை,இது ஒரு பெரும் புதுமை என கோகூர் மக்கள் இன்றும் கூறுகின்றனர்.
கோகூர் புனித அந்தோனியாரின் புதுமையை சொல்லிக்கொண்டே போகலாம் நீங்களும் ஒருநாள் கோகூர் புனித அந்தோனியார் ஆலயம் வந்துதான் பாருங்களேன்,பிறகு நீங்களும் கோகூர் புனித அந்தோனியாரின் சாட்சியாய் வாழ்வீர்கள்.
கோகூர் புனித அந்தோனியார் புகழ் சொல்லும் பாடல்கள்
திருவழிபாட்டுக் குறிப்புகள்:
1.வாரம்தோறும் செவ்வாய் கிழமை மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை மன்றாட்டு மாலை நவநாள் ஜெபம் மற்றும் திருப்பலி .(பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிறப்பு திருப்பலியும் உண்டு )
2.ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செவ்வாய் புனித கோகூர் அந்தோனியாரின் கொடியேற்றம் ,அதை தொடர்ந்து 9 நாட்களுக்கும் மாலை 6.15 மணிக்கு ஆலயத்தை சுற்றி சிறிய தேர்ப்பவனி, ஜெபமாலை ,மன்றாட்டு மாலை நவநாள் ஜெபம் மற்றும் திருப்பலி.
3.வியாழன்,வெள்ளி,சனி என கடைசி மூன்று நாட்களும் புனித கோகூர் அந்தோனியாரின் சிறப்பு தேர்ப்பவனி.
4.திருவிழாவின் இறுதி நாள் ஞாயிறு காலை 5 மணிக்கும் ,6.30
க்கும் திருவிழா திருப்பலிகள் .இதன் நிறைவில் பங்குத்தந்தையின் அனுமதி
கடிதம் கொடுப்பவர்களின் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படும்
முக்கிய வேண்டுகோள் :
கோகூர்
புனித அந்தோனியாரை நம்பி வரும் பக்தர்களுக்கு தங்க இடமும் ,குடிக்க
தண்ணீரும்,கழிப்பிட வசதிகளும் கிடைக்காமல் இருப்பது ஒரு குறையாகவே உள்ளது
,இந்த குறையை போக்க நன்கொடைகள் வரவேற்கபடுகிறது..
அன்புடையீர் ,
கோடி
அற்புதர் கோகூர் புனித அந்தோனியாரின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் ,தன்னை
தேடி வந்த எல்லா மக்களுக்கும் புதுமைகளை வாரிவழங்கும் வள்ளல் கோகூர்
புனித அந்தோனியார்,இந்த கோகூர் புனித அந்தோனியாரின் திருத்தல
வளர்ச்சிக்காக உங்களின் எளிய காணிக்கைகளை ,நன்கொடைகளை மனமுவந்து தந்து
புனித அந்தோனியாரை மகிமை படுத்த வேண்டுகிறோம் ,
கோகூர் புனித அந்தோனியாரின் தற்போதைய தேவைகள்
1. கோகூர் புனித அந்தோனியாருக்கு புதிய சப்பரம் (தேர் ) செய்தல்.
2. கோகூர் புனித அந்தோனியாரின் பக்தர்களுக்கு குடி தண்ணீர் வசதி செய்தல்.
3.கோகூர் புனித அந்தோனியாரின் பக்தர்கள் தங்கி இளைப்பாற சிறிய செட் அமைத்தல் .
நன்கொடைகளை டி .டி ஆக எடுக்க THE PARISH PRIEST ,ST JOSHEP CHURCH -KEELVELUR -NAGAPATTINAM என்ற பெயரில் எடுத்து அனுப்பவும்.
அல்லது நேரடியாக வங்கி மூலம் செலுத்தலாம்
SOUTH INDIAN BANK A / C NO
0052053000103473
IFSC /NEFT CODE :SIBL 0000052
கோகூர் புனித அந்தோனியாரை நோக்கி ஜெபம்
புதுமைகள் பல புரிய அருள்பெற்ற புனித கோகூர்அந்தோனியாரே !
எங்கள் விண்ணப்பங்களை ஏற்று எங்களுக்கு இறைவனின் அருளை பெற்றுத்தாரும் புனித கோகூர்அந்தோனியாரே !குழந்தை
இயேசுவை கையில் ஏந்தும் பேறு பெற்ற புனிதரே புனித கோகூர்அந்தோனியாரே
!துன்ப படுவோருக்கு துணைபுரியும் வள்ளலே புனித கோகூர்அந்தோனியாரே
!ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் அரவணைக்கும் நேச தந்தையே புனித
கோகூர்அந்தோனியாரே !அசைக்க முடியாத நம்பிக்கையுடன் உமது திருத்தலத்திற்கு
வந்துள்ளோம் புனித கோகூர்அந்தோனியாரே !நீர் கையில் ஏந்தியுள்ள குழந்தை
யேசுவிடம் எங்களுக்காக பரிந்து பேசி எம் ஆன்மாவிற்கும் உடலுக்கும் வேண்டிய
வரங்களைப் பெற்றுத் தாரும் புனித கோகூர்அந்தோனியாரே !துன்ப படுவோரின் துயர்
துடைப்பவரே புனித கோகூர்அந்தோனியாரே !துன்ப துயரங்கள் ,வியாதிகள்
,சோதனைகள் ,தீமைகள் அனைத்திலிருந்தும் எங்களை காப்பாற்றும் புனித
கோகூர்அந்தோனியாரே !எங்கள் குடும்பங்களையும் வேலைகளையும் நிலங்களையும்
ஆசிர்வதியும் புனித கோகூர்அந்தோனியாரே !
ஆமென்
நமது கருத்துகளுக்காக
| பர :|அருள் :|தமதிரித்துவம் |
தொடர்புக்கு
Rev .Fr.S .டேவிட் செல்வகுமார்.MA.MA.
அருட்திரு பங்கு தந்தை அவர்கள்
புனித வளனார் ஆலயம்-கீழ்வேலூர்- நாகப்பட்டினம்
(கோகூர் புனித அந்தோனியார் திருத்தல பங்கு )
04366-275210 Mobile: 9443031389
புனித கோகூர் அந்தோனியாரின் மன்றாட்டு மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
............................................
............................................
ஜென்ம பாவமில்லாமல் பிறந்த புனித கன்னி மரியே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
------------------------------------
பதுவை நகரில் ஒளியாய் உதித்த கோகூர் அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
திருச்சிலுவையை மிகவும் நேசித்தவரான கோகூர் அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தூய்மையின் லீலீ மலரான கோகூர் அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
குழந்தை இயேசுவை கரங்களில் ஏந்தும் பாக்கியம் பெற்ற
கோகூர் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
உண்மையை மட்டும் சொன்ன அழியா நாவினை உடைய கோகூர் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கீழ்வேலூர் பங்கிலே ,கோகூர் மண்ணிலே தோன்றி இன்று புதுமைகள் பலபுரியும் கோகூர் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
வெட்டாற்றில் நீரில் மிதந்து வந்து கோகூரில் கோயில் கட்ட சொன்ன கோகூர் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கோகூர் அந்தோனியாரே உம்மை நம்பி வந்து வேண்டிகொண்ட எல்லா மக்களையும் உன் புதுமையால் சந்தோசமாக்கிய கோகூர் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
திருமண வரம் தரும் கோகூர் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
குழந்தை வரம் தரும் கோகூர் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தீய ஆவியை விரட்டும் கோகூர் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
வெளிநாட்டு வேலைகளை வாங்கித்தரும் கோகூர் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
குடும்பங்களில் சந்தோசம் தரும் கோகூர் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மரியே வாழ்க
ஏசுவுக்கே புகழ்
வளர்க கோகூர் புனித அந்தோனியாரின் புகழ்.
கோகூர் புனித அந்தோனியார் புகழ் சொல்லும் பாடல்கள்
திருவழிபாட்டுக் குறிப்புகள்:
1.வாரம்தோறும் செவ்வாய் கிழமை மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை மன்றாட்டு மாலை நவநாள் ஜெபம் மற்றும் திருப்பலி .(பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிறப்பு திருப்பலியும் உண்டு )
2.ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செவ்வாய் புனித கோகூர் அந்தோனியாரின் கொடியேற்றம் ,அதை தொடர்ந்து 9 நாட்களுக்கும் மாலை 6.15 மணிக்கு ஆலயத்தை சுற்றி சிறிய தேர்ப்பவனி, ஜெபமாலை ,மன்றாட்டு மாலை நவநாள் ஜெபம் மற்றும் திருப்பலி.
3.வியாழன்,வெள்ளி,சனி என கடைசி மூன்று நாட்களும் புனித கோகூர் அந்தோனியாரின் சிறப்பு தேர்ப்பவனி.
4.திருவிழாவின் இறுதி நாள் ஞாயிறு காலை 5 மணிக்கும் ,6.30 க்கும் திருவிழா திருப்பலிகள் .இதன் நிறைவில் பங்குத்தந்தையின் அனுமதி கடிதம் கொடுப்பவர்களின் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படும்
முக்கிய வேண்டுகோள் :
கோகூர்
புனித அந்தோனியாரை நம்பி வரும் பக்தர்களுக்கு தங்க இடமும் ,குடிக்க
தண்ணீரும்,கழிப்பிட வசதிகளும் கிடைக்காமல் இருப்பது ஒரு குறையாகவே உள்ளது
,இந்த குறையை போக்க நன்கொடைகள் வரவேற்கபடுகிறது..
அன்புடையீர் ,
கோடி
அற்புதர் கோகூர் புனித அந்தோனியாரின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் ,தன்னை
தேடி வந்த எல்லா மக்களுக்கும் புதுமைகளை வாரிவழங்கும் வள்ளல் கோகூர்
புனித அந்தோனியார்,இந்த கோகூர் புனித அந்தோனியாரின் திருத்தல
வளர்ச்சிக்காக உங்களின் எளிய காணிக்கைகளை ,நன்கொடைகளை மனமுவந்து தந்து
புனித அந்தோனியாரை மகிமை படுத்த வேண்டுகிறோம் ,
கோகூர் புனித அந்தோனியாரின் தற்போதைய தேவைகள்
1. கோகூர் புனித அந்தோனியாருக்கு புதிய சப்பரம் (தேர் ) செய்தல்.
2. கோகூர் புனித அந்தோனியாரின் பக்தர்களுக்கு குடி தண்ணீர் வசதி செய்தல்.
3.கோகூர் புனித அந்தோனியாரின் பக்தர்கள் தங்கி இளைப்பாற சிறிய செட் அமைத்தல் .
நன்கொடைகளை டி .டி ஆக எடுக்க THE PARISH PRIEST ,ST JOSHEP CHURCH -KEELVELUR -NAGAPATTINAM என்ற பெயரில் எடுத்து அனுப்பவும்.
அல்லது நேரடியாக வங்கி மூலம் செலுத்தலாம்
SOUTH INDIAN BANK A / C NO
0052053000103473
IFSC /NEFT CODE :SIBL 0000052
கோகூர் புனித அந்தோனியாரை நோக்கி ஜெபம்
புதுமைகள் பல புரிய அருள்பெற்ற புனித கோகூர்அந்தோனியாரே !
எங்கள் விண்ணப்பங்களை ஏற்று எங்களுக்கு இறைவனின் அருளை பெற்றுத்தாரும் புனித கோகூர்அந்தோனியாரே !குழந்தை
இயேசுவை கையில் ஏந்தும் பேறு பெற்ற புனிதரே புனித கோகூர்அந்தோனியாரே
!துன்ப படுவோருக்கு துணைபுரியும் வள்ளலே புனித கோகூர்அந்தோனியாரே
!ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் அரவணைக்கும் நேச தந்தையே புனித
கோகூர்அந்தோனியாரே !அசைக்க முடியாத நம்பிக்கையுடன் உமது திருத்தலத்திற்கு
வந்துள்ளோம் புனித கோகூர்அந்தோனியாரே !நீர் கையில் ஏந்தியுள்ள குழந்தை
யேசுவிடம் எங்களுக்காக பரிந்து பேசி எம் ஆன்மாவிற்கும் உடலுக்கும் வேண்டிய
வரங்களைப் பெற்றுத் தாரும் புனித கோகூர்அந்தோனியாரே !துன்ப படுவோரின் துயர்
துடைப்பவரே புனித கோகூர்அந்தோனியாரே !துன்ப துயரங்கள் ,வியாதிகள்
,சோதனைகள் ,தீமைகள் அனைத்திலிருந்தும் எங்களை காப்பாற்றும் புனித
கோகூர்அந்தோனியாரே !எங்கள் குடும்பங்களையும் வேலைகளையும் நிலங்களையும்
ஆசிர்வதியும் புனித கோகூர்அந்தோனியாரே !
ஆமென்
நமது கருத்துகளுக்காக
| பர :|அருள் :|தமதிரித்துவம் |
தொடர்புக்கு
Rev .Fr.S .டேவிட் செல்வகுமார்.MA.MA.
அருட்திரு பங்கு தந்தை அவர்கள்
புனித வளனார் ஆலயம்-கீழ்வேலூர்- நாகப்பட்டினம்
(கோகூர் புனித அந்தோனியார் திருத்தல பங்கு )
04366-275210 Mobile: 9443031389
புனித கோகூர் அந்தோனியாரின் மன்றாட்டு மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
............................................
............................................
ஜென்ம பாவமில்லாமல் பிறந்த புனித கன்னி மரியே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
------------------------------------
பதுவை நகரில் ஒளியாய் உதித்த கோகூர் அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
திருச்சிலுவையை மிகவும் நேசித்தவரான கோகூர் அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தூய்மையின் லீலீ மலரான கோகூர் அந்தோனியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
குழந்தை இயேசுவை கரங்களில் ஏந்தும் பாக்கியம் பெற்ற
கோகூர் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
உண்மையை மட்டும் சொன்ன அழியா நாவினை உடைய கோகூர் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கீழ்வேலூர் பங்கிலே ,கோகூர் மண்ணிலே தோன்றி இன்று புதுமைகள் பலபுரியும் கோகூர் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
வெட்டாற்றில் நீரில் மிதந்து வந்து கோகூரில் கோயில் கட்ட சொன்ன கோகூர் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கோகூர் அந்தோனியாரே உம்மை நம்பி வந்து வேண்டிகொண்ட எல்லா மக்களையும் உன் புதுமையால் சந்தோசமாக்கிய கோகூர் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
திருமண வரம் தரும் கோகூர் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
குழந்தை வரம் தரும் கோகூர் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தீய ஆவியை விரட்டும் கோகூர் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
வெளிநாட்டு வேலைகளை வாங்கித்தரும் கோகூர் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
குடும்பங்களில் சந்தோசம் தரும் கோகூர் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மரியே வாழ்க
ஏசுவுக்கே புகழ்
வளர்க கோகூர் புனித அந்தோனியாரின் புகழ்.
This Blog is Created by
M.RAJARAM.ME.MCA(Eng).MBA(S).,
Asst Professor.
M.RAJARAM.ME.MCA(Eng).MBA(S).,
Asst Professor.
.jpg)









.jpg)

.jpg)











No comments:
Post a Comment